இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்; இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது. இளைஞர்களின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகவே பார்க்கப்படும். உலகின் நலனுக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் சிறந்து விளையாட்டுக்கான சூழல் உள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தை உங்கள் இயக்கமாக மாற்றுங்கள். வளர்ந்து வரும் இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது; இளைஞர்களிடம் ஆற்றல், உற்சாகம், வைராக்கியம் இருக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் கற்பனைக்கு எட்டாத தீர்வுகளை ஆராய வேண்டும் இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.