ஈரோடு கிழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த இந்து அமைப்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமலேயே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் தங்கள் சார்பில் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறிவருகின்றனர். அத்துடன் கூட்டணிக் கட்சியினரை நேரடியாக சென்று சந்தித்து இரு தரப்புமே ஆதரவு கோரி வருகின்றனர்.

இந்த சூழலில்
எடப்பாடி பழனிசாமி
சேலத்தை மையமாகக் கொண்டு தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறார். முக்கிய ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சேலத்திலேயே நடைபெறுகிறது.

இந்து பரிவார் அமைப்பு மற்றும் மனித உரிமைகள் கழகம் கட்சியினர், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய இந்து பரிவார் அமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது, அதிமுக ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க வந்துள்ளதாக கூறினர். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பணியாற்ற தயாராக உள்ளதாகவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியபடி செயல்பட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேபோல் மனித உரிமைகள் கழகத்தினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் சுரேஷ்கண்ணன் தலைமையில் ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.