உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் – ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் வழங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், மற்ற ஆயுதங்களை போலவே இந்த டாங்கிகளும் எரியும் என்றும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.