வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : தமிழகத்தின் இருளர் இனத்தைச்சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் இருவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.
கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் – தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டு தோறும்பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு பத்மவிருதுக்கு தேர்வு பெற்றவர்கள் பெயர் இன்று (ஜன.25) வெளியிடப்பட்டது.
அதன்படி உலகம் முழுவதும் சென்று அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளை பிடித்த தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இன பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி. சடையன் இருவர் உள்பட 26 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள், மேலும் மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானபிஸ்சுக்கு பத்மவிபூஷன் உள்பட இந்தாண்டு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement