மகனுடன் சேர்ந்து கடத்தப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் வீடு திரும்பினார்.. ஆந்திராவில் இறக்கிவிட்டுச் சென்றதாகத் தகவல்..!

கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடாவில் காரில் கடத்தப்பட்ட அதிமுக பெண் ஒன்றிய கவுன்சிலர், மகனுடன் பத்திரமாக வீடு திரும்பினார்.

செவ்வாய்கிழமையன்று வீட்டில் இருந்த ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகிய இருவரும் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டின் முன் நின்ற இன்னோவா காரும் காணாமல் போன நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, அதன் ஹார்ட் டிஸ்க்-கும் மாயமானது.

இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலரின் கணவர் அளித்த புகாரின்பேரில், 4 தனிப்படைகள் அமைத்து ஆந்திராவிற்கு விரைந்த போலீசார், அம்மாநில போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, 7பேர் கொண்ட கும்பல் தங்களை வீட்டில் இருந்து கடத்தி சென்றதாகவும், தங்களை பல மணி நேரம் காரில் வைத்து ஆந்திராவில் சுற்றிய கடத்தல் கும்பல் பின்னர் காருடன் விட்டுவிட்டு வேறு காரில் தப்பி சென்று விட்டதாக தப்பிவந்த இருவரும் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருவரையும் மீட்ட போலீசார், தொழில் போட்டி காரணமா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கடத்தப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.