தமிழகத்தில் மனைவி உயிரிழந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த மனைவி
தூத்துக்குடியின் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலையை சேர்ந்தவர் எட்டப்பன் (40). மாற்றுத்திறனாளி.
இவருக்கு மாற்றுத்திறனாளி பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் மனைவி இறந்துவிட்டார். தற்போது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தற்கொலை
மனைவி இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காணப்பட்ட எட்டப்பன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.