தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகிய இருவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறைந்த டாக்டர் திலீப் மஹாலானாபிஸூக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது. இவர் நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசலை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.