குடியரசு தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி தெரியுமா ?

குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நாளில் குடியரசு தினத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துக் கொள்வோம்.

  • 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி காலை 10.18 மணி முதல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
  • 6 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • இது தான் உலகிலேயே மிகவும் நீளமான அரசியல் அமைப்புச் சட்டமாகும்.
  • இந்திய சட்ட அமைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பு வரை பிரிட்ஷாரின் இந்திய அரசு சட்டம் 1935 பின்பற்றப்பட்டது.
  • இந்திய அரசியல் சட்டத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் கொண்ட குழு இயற்றியது. அரசியல் சட்டத்தை எழுதி முடிக்க 2 வருடம் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு பிரதிகள் மட்டுமே அப்போது எழுதப்பட்டது. ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று இந்தியிலும் எழுதப்பட்டது.
  • 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியன்று இந்த இரண்டு பிரதிகளிலும் 308 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இவை இரண்டும் நாடாளுமன்ற நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டங்கள் 3 நாட்களுக்கு நடக்கும். ஜனவரி 29ம் தேதி விஜய் சௌவ்க் பகுதியில் இந்திய ராணுவத்தினர் சார்பில் ‘Abide by Me’பாடலின் இசை வாசிக்கப்பட்ட பிறகு கொண்டாட்டங்கள் நிறைவுப் பெற்றதாக அறிவிக்கப்படும்.
  • இந்த பாடல் தேச தந்தை மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறப்படுகிறது.
  • குடியரசு தினத்தின் போது வீரதீர செயல்களுக்கான பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா, கிர்தி சக்ரா மற்றும் அசோக சக்ரா விருதுகள் வழங்கப்படும்.
  • இந்திய அரசியல் அமைப்பு சட்ட முன்னுரையானது அமெரிக்க சட்ட அமைப்பின் முன்னுரையை போல “We the people…” என்று தொடங்கும்.
  • 1959 முதல் 1954 வரை குடியரசு தின கொண்டாட்டங்கள் இர்வின் மைதானம், செங்கோட்டை, ராம்லீலா மைதானம், கிங்ஸ்வே -ல் நடைபெற்றன.
  • ராஜ்பாத்தில் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பு 1955ம் ஆண்டு நடைபெற்றது.
  • 1950ம் ஆண்டு நடந்த முதல் குடியரசு தின நிகழ்ச்சியில் அப்போதைய இந்தோனேசிய குடியரசு தலைவர் சுகர்னோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
  • குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு அதாவது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ரவீந்திர நாத் தாகூர் எழுதிய ஜன கன மன பாடல் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.