ஒரே நாளில் 2 சம்பவத்தில் 3 விமானப் படை விமானங்கள் விபத்து: விமானி பலி| 2 Air Force Jets Involved In Major Crash In Madhya Pradesh: Reports

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

குவாலியர்: ம.பி.,யில் 2 போர் விமானங்களும், ராஜஸ்தானில் ஒரு விமானமும் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானி ஒருவர் உயிரிழந்தார். அங்கு மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ம.பி., மாநிலம் மொரேனா என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் -30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக இரண்டு விமானங்களும் கிளம்பி சென்ற போது விபத்து ஏற்பட்டது.

latest tamil news

அங்கு மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இதில், விமானி ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்துள்ளனர். விமானம் நொறுங்கிய தகவல் அறிந்ததும் அதனை பார்க்க ஏராளமானோர் அந்த இடத்தில் கூடினர்.

latest tamil news

அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதல் கட்ட விசாரணையில் இந்த விமானம், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எனவும், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.