ஜார்க்கண்டில் தீ விபத்து: 5 பேர் பலி| Jharkhand fire: 5 killed

ராஞ்சி: ஜார்கண்ட் தன்பாத்தில் உள்ள மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி, 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில் டாக்டர், அவரது மனைவி, அவர்களது மருமகன், உறவினர் மற்றும் அவர்களது வீட்டு வேலை செய்பவர்கள் தீயில் சிக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.