Dancer Ramesh Suicide: டான்சர் ரமேஷ் கொலையா? மரணத்தில் நீடிக்கும் மர்மம்… வெளியான பகீர் தகவல்!

டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டான்சர் ரமேஷ்சினிமா நடிகர் மற்றும் டிக்டாக் பிரபலமான டான்சர் ரமேஷ் நேற்று சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் டான்ஸர் ரமேஷ். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி சினிமா படங்களிலும் நடித்து வந்தார் டான்ஸர் ரமேஷ். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
​ Vijay: கதையைதான் திருடுனீங்க… இதையுமா? விஜய்யை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!​
இரண்டு மனைவிகள்தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் டான்ஸராக நடித்துள்ளார் ரமேஷ். டிக்டாக் செயலி மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷுக்கு சினிமாவில் நடித்த பிறகு ரசிகர் பட்டாளம் அதிகமானது. டான்ஸர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சித்ராவுக்கும் டான்ஸர் ரமேஷுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
​ Khushbu: அச்சச்சோ… விபத்தில் சிக்கிய குஷ்பு… காலில் பெரிய கட்டு… தாங்க முடியாத வலி!​
பிறந்தநாளை முன்னிட்டுசென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் குடியிருப்பில் இரண்டாவது மனைவி இன்பவள்ளியுடன் வசித்து வந்துள்ளார் டான்ஸர் ரமேஷ். இரண்டு மனைவிகளுடனும் மாறி மாறி வாழ்ந்து வந்துள்ளார் டான்ஸர் ரமேஷ். டான்ஸர் ரமேஷுக்கு குடிப்பழக்கமும் உண்டு என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது முதல் மனைவியையும் மகள்களையும் சந்திக்கப்போவதாக இரண்டாவது மனைவியான இன்பவள்ளியிடம் கூறியுள்ளார் டான்சர் ரமேஷ்.
​ Dancer Ramesh Suicide: ‘துணிவு’ நடிகர் டான்ஸர் ரமேஷ் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்!​
10வது மாடியில் இருந்து குதித்துஆனால் இன்பவள்ளி, ரமேஷை அவரது முதன் மனைவியையும் மகள்களையும் சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்தான் மாலை 5 மணியளவில் தான் வசித்து வந்த குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடலை பார்த்த அப்பகுதி மக்கள், அந்த இடத்தில் ரத்தமே இல்லாமல்தான் உடல் கிடந்ததாக கூறியுள்ளனர். ​ Rajinikanth, YG Mahendran: சகலையை விட்டு கொடுக்க முடியுமா? ஒரே போடாய் போட்ட ஓய்ஜி மகேந்திரன்!​
டான்சர் ரமேஷ் கொலையா?இதனார் டான்சர் ரமேஷ் தற்கொலைதான் செய்து கொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே டான்சர் ரமேஷின் முதல் மனைவியான சித்ரா, பி4 பேசின் பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பி4 பேசின் பாலம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டான்சர் ரமேஷின் உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. டான்சர் ரமேஷின் திடீர் மரணம் அவரது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​ Biggboss Dhanalakshmi: நட்ட நடு ரோட்டில்… என்ன தனா இதெல்லாம்… ரொம்ப தப்பும்மா!​
டான்சர் ரமேஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.