13 ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று(28.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கியவர்கள் தற்போது புதிய நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர்.
அதற்காகவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கே முயற்சிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,