99 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி| The New Zealand team was bowled out for 99 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ:இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா,-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் களமிறங்கி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 99 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டனர் 19 ரன்னும், பின் ஆலன், கான்வே தலா 11 ரன்களுக்கும் சாப்மேன் மற்றும் பிரேஸ்வல் தலா 14 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 100 ரன் என்ற எளிய இலக்காக கொண்டு அடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.