”மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிப்பு..” – திட்ட இயக்குநர் அர்ஜுனன்..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில, மத்திய அரசுகள் ஒப்புதல் அளித்ததும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கும் என்றும் மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபிறகு, மெட்ரோ இயக்குநர் அர்ஜுனன் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

ஒத்தக்கடை – திருமங்கலம் இடையே 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கோரிப்பாளையம் – வசந்த நகர் இடையே மட்டும் சுரங்க ரயில்பாதை அமைக்கும் தேவை இருப்பதாகவும் கூறினார்.

பணிகள் துவங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும் மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.