கடந்த ஆண்டில் 165 மரண தண்டனைகள் விதிப்பு – 20 ஆண்டுகளில் இதுவே அதிகம்

புதுடெல்லி,

இந்தியாவில் 2022-ம் ஆண்டு மரண தண்டனை குறித்த புள்ளிவிவர அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள விசாரணை கோர்ட்டுகள் 165 மரண தண்டனைகளை விதித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை எண்ணிக்கை இதுவே ஆகும்.

மரண தண்டனை வழக்குகளில் 51.28 சதவீத வழக்குகள் பாலியல் குற்ற வழக்குகள் ஆகும். ஆமதாபாத் குண்டு வெடிப்பு என்ற ஒரு வழக்கில் மட்டும் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதிநாள் நிலவரப்படி, 539 கைதிகள், மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். மரண தண்டனையை எதிர்நோக்கி வாழும் கைதிகள் எண்ணிக்கை, 2015-ம் ஆண்டுக்கு பிறகு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.