தேனி: அரசுப் பள்ளியில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தனரா?- அதிர்ச்சி வீடியோவும், பள்ளி விளக்கமும்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி​அமைந்திருக்கிறது​. 6​ ​முதல் 10-ம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியில் ​படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், கழிவறையை​யும் சுத்தம் செய்​வது போன்ற​வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசு உயர்நிலைப்பள்ளி

மாணவர் ஒருவர் கையில் பக்கெட்டுடன் கழிப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதும், ​சில மாணவர்கள் ​பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை சுத்தம் செய்வதும், சுவர்களில் ஒட்டடை அடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. 

இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்திய நிலையில், ​இது குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனகராஜிடம் ​பேசினோம். “இதுபோன்ற தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை. பள்ளியில் தூய்மைப் பணியாளர் பணியிட​ங்கள் காலியாக​ இருக்கின்றன. அதனால், ஆசிரியர்கள் பங்களிப்புடன் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து வருகிறோம். அவர்களும் இல்லாத நேரத்தில், பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியின் பொறுப்பு உடற்கல்வி ஆசிரியரிடம் வழங்கப்பட்டிருக்கிறது. 

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் மாணவிகள்

​அவ​ர் கழிவறையில் துர்நாற்றம் வரும் என்பதற்காக கடைசியில் வரும் மாணவர்கள் தண்ணீர் ஊற்றிவிட்டு வர வேண்டும் என்று அறிவுரை வழங்​கியிருக்கிறார். அதனடிப்படையில் மாணவர் ஒருவர் கழிவறையில் தண்ணீர் ஊற்​றும்போது, அதை மாணவர் ஒருவர் ​படம் ​​பிடித்து வெளியிட்டிருக்கிறார். இரு​ப்பினும் இதில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படு​ம்​”​​ எ​ன்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.