பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பு; பின்வாங்கிய தலிபான்கள்- அப்ப செஞ்சது யார்?

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மசூதிகளில் வழிபாட்டிற்கு செல்வர். அதில் அதிகாரிகள் மட்டும் 300 முதல் 400 பேர் வரை இருப்பர். இந்நிலையில் நேற்று பிற்பகல் மசூதி ஒன்றில் திடீரென குண்டுவெடித்தது. இதில் அந்த மசூதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதுபற்றி தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பலி எண்ணிக்கை உயர்வு

தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இருப்பினும் பெரிய சுவர்கள் இடிந்து விழுந்திருந்ததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதில் 28 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் 72 பேர் பலியானதாக தெரியவருகிறது.

பாகிஸ்தான் பெஷாவர் மசூதியில் குண்டுவெடிப்பு – 46 பேர் பலி; 150 பேர் காயம்!

துக்கம் அனுசரிப்பு

காயமடைந்த நபர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்திருக்கிறது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஒருநாள் துக்கம் அனுசரிக்கும் வகையில் கைபர் பக்துன்கவா மாகாண முதல்வர் முகமது ஆசம் கான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த மாகாணம் முழுவதும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

யார் காரணம்?

பெஷாவர் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்ற கேள்வி எழுந்தது. பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் முகாமிட்டு அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் பெஷாவர் குண்டுவெடிப்பு யாருடைய வேலை? என்ன காரணம்? என உடனடியாக தெரிய வரவில்லை.

பின்வாங்கிய தலிபான்கள்

இந்நிலையில் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்று ட்விட்டர் பக்கத்தில் தெக்ரீக்-இ-தலிபான் அமைப்பின் தளபதி சர்பாகாப் முகமந்த் பதிவிட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தெக்ரீக்-இ-தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது குராசானி மறுப்பு தெரிவித்தார். அதில், எங்களின் இலக்கு மசூதிகளும், மதம் சார்ந்த இடங்களும் கிடையாது என்று விளக்கம் கொடுத்தார்.

‘என்னை கொல்ல சதி ’ – இம்ரான் கான் கதறல்.!

ஐ.நா சபை கண்டனம்

இதனால் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது யார்? வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்பார்களா? இல்லை விடை தெரியாத கேள்வியாக தொடருமா? போன்ற கேள்விகள் எழுகின்றன. பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கூறுகையில்,

திங்கள் அன்று பாகிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வழிபாடு நடத்தும் இடத்தில் இப்படி ஒரு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் அருவருக்கத்தக்கது. சுதந்திரமான நம்பிக்கை, வழிபாடு, அமைதியான வாழ்க்கை, பாதுகாப்பு. இவையெல்லாம் சர்வதேச அளவில் ஒவ்வொரு மனிதர்களின் உரிமை என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.