13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மந்திரவாதி கைது!!

மாந்திரீகம் செய்வதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கலுங்கடி பகுதியை சேர்ந்த மந்திரவாதி மணிகண்டன் (35) என்பவரை அணுகியுள்ளார்.

இதனையடுத்து வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், அப்படி செய்தால் மனைவிக்கு பிடித்த நோய் விலகும் என மந்திரவாதி மணிகண்டன் கூறியுள்ளார்.

அதற்கு ஒப்புக் கொண்ட கூலித்தொழிலாளி வீட்டில் மாந்திரீக பூஜைகள் செய்ய அனுமதி அளித்தார். எனவே மணிகண்டன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கூலித்தொழிலாளியின் 13 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமியிடம் பேசியுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துக்கொண்ட அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மணிகண்டன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார் மந்திரவாதி மணிகண்டனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.