மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!

மண்ட்லா,

மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா தேசிய புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு டிஜே என்னும் 9 வயது பெண் புலி சமீபத்தில் 5 குட்டிகளை ஈன்றது. தற்போது அவை ஆரோக்கியத்துடன் பூங்காவை சுற்றி நடமாடி வருகின்றன. இதனை ஆர்வமுடன் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் பூங்காவுக்கு வருகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 526 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயரலாம் என தெரிகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.