மாணவர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் அறிவிப்பு..!!

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்..

நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடியும், கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கான ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 மடங்கு அதிகம்..

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும். 

கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளர்ப்புக்கு முன்னுரிமை அளித்து விவசாய கடன் இலக்கு ₹20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்!

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்.

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு! கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.