கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(02-02-2023) சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று(02-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.