டெல்லியை உலுக்கிய மற்றுமொரு சம்பவம் ..!! தலைநகரில் 15 வயது சிறுமியின் உடல் உறுப்புக்கள் திருட்டு..!!

தலைநகர் டெல்லியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 15 வயது சிறுமி, இந்து ராவ் மருத்துவமனையில் கடந்த 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி மருத்தவர்கள் அந்த சிறுமிக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்தனர். ஜனவரி 26-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இறுதிச் சடங்கு செய்யும் போது சிறுமியின் வயிற்றில் வெட்டு விழுந்ததை உறவினர்கள் கண்டுபிடித்தனர். சில உறுப்புகள் அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் தையல் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் டெல்லி போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவ வாரியத்தை அமைக்குமாறு டெல்லி அரசை போலீசார் கேட்டுக் கொண்டனர். தற்போது சிறுமியின் உடல் தேஜ் பகதூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால், சிறுமியின் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) (வடக்கு) சாகர் சிங் கல்சி கூறுகையில், மருத்துவமனையில் இருந்து உடலை எடுத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோரிடமிருந்து புகார் எதுவும் இல்லை. உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற பிறகு, சிறுமியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இறுதிச் சடங்கிற்கு தயாராகும் போது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதாக அவர் விளக்கினார். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.