வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் அறிவித்துள்ளார்