பாட்னா: பீஹாரில் முசாபர்பூர்-நர்காத்லகாஞ்ச் ரயில்வே பிரிவுக்கு உட்பட்ட மஜவுலியா ரயில் நிலையம் அருகே சத்யகிரஹா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ரயிலின் 5 பெட்டிகள் என்ஜினில் இருந்து கழன்று விபத்துக்குள்ளானது. இதனால், அந்த பெட்டிகள் வழியிலேயே நின்று விட்டன. இதனை அறிந்த ரயிலில் இருந்த பயணிகள் அலறினர்.
இது பற்றிய தகவல் அறிந்து கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணி மேற்கொண்டனர். இதனால், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில மணிநேரம் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement