World comes to India: சீறும் இந்திய பொருளாதாரம்; பலம் சேர்க்க ஓடிவரும் உலக நாடுகள்!

உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. வரும் 2030ஆம் ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறும் அளவிற்கு வல்லமை கொண்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகான சூழல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. உக்ரைன் போரால் உலகின் வர்த்தக சங்கிலித் தொடர் பெரிதும் பாதிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் கூட பொருளாதாரம் நலிவடைந்து மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இவ்வளவு சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து முன்னேற்ற பாதையில் செல்ல இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயம் மக்கள்தொகை அதிகரிப்பில் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளது. அதாவது வறுமை, பட்டினி, அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பின்மை போன்றவை அதிகரிக்கும். இவற்றை சமாளிக்க பெரிதான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இவற்றுக்கு எல்லாம் நமது மனித வளம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறிப்பாக இளைஞர்கள் கூட்டம். சீனா நம்மை விட வளர்ந்த பொருளாதார நாடாக திகழ்கிறது. அவர்களின் மக்கள்தொகை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டில் பாதிக்கும் மேலான மக்கள்தொகை 25 வயதுக்கும் கீழ் இருக்கின்றனர். இது மிகப்பெரிய சரித்திரத்தை எழுதி பொருளாதார வளர்ச்சியை சீறிப் பாய உதவும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் புதிய தொழில்கள், முதலீடுகள் ஆகியவற்றையும் அடைய வேண்டியுள்ளது.
ஒற்றுமையை பறைசாற்றும் ஜப்பான்
சீனா உடனான எல்லைப் பகுதி அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் ஜப்பான் உடன் இந்தியா நெருங்கி செல்ல முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் வெளியுறவுக் கொள்கையுடன் ஒன்றிப் போக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பாதுகாப்பான உலகை கட்டமைக்கவும், சர்வதேச அளவில் புதிய வர்த்தக சங்கிலியை உருவாக்கவும் முயற்சிக்கிறது.
புரட்சி பாதையில் சவுதி அரேபியாஇந்தியா தற்போது நடைபோட்டு வரும் புரட்சிகரமான பயணத்தில் மேற்கு ஆசிய நாடுகளின் ஆதரவை பெறுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் சவுதி அரேபியா உடன் இந்தியா நல்ல நட்புறவை பின்பற்றி வருகிறது. அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் உடனான இணக்கமான போக்கு எதிர்கால திட்டங்களுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேர்க்கோட்டில் ஆஸ்திரேலியாகிரிக்கெட்டில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒன்றாக முன்னோக்கி பயணித்து வருகின்றன. அதேபோல் இருநாட்டு நல்லுறவிலும் வலுவான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். வெளியுறவுக் கொள்கைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதால் இருநாடுகளும் ஒன்றாக பயணிக்க உதவும்.
நமது கரையில் இத்தாலிய படகுவலதுசாரி அரசியலை பின்பற்றும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, சீனா உடன் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். இது இந்தியா உடன் இணக்கமாக செல்ல கைகொடுக்கும். இதன்மூலம் இருநாட்டு வர்த்தக உறவும் அடுத்தகட்டத்திற்கு செல்லும் எனச் சொல்லப்படுகிறது.
நெசவு செய்யும் கனடாஇந்தியா உடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரிடியூ அளித்து வருகிறார். கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பட்டு வருகிறது.
செல்ஃபி மூடில் இங்கிலாந்துபிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பாரம்பரியம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்நாட்டை பொறுத்தவரை இந்தியா உடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை பின்பற்ற விரும்புகிறது. இது நமக்கு சாதகமாக உள்ளது.
சமோசா சாப்பிடும் சீனாஇந்தியா, சீனா இடையில் கசப்பான நிகழ்வுகள் சமீப காலமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜி-20 மாநாட்டிற்காக இந்தியா வரும் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இனிமையான அனுபவங்கள் கிடைக்கும் என்கின்றனர். எல்லையில் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தாலும் வர்த்தக உறவில் ஓரளவு இணக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது.
யானை உடன் அமெரிக்காஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நாட்டை மேலும் வலுவான ஒன்றாக மாற்ற விரும்புகிறார். அதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இணக்கமாக செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியின் காதல்ஜி-20 மாநாட்டிற்காக இந்தியா வரும் ஜெர்மனி அதிபர் ஓலாப் சால்ட்ஸ் பசுமை ஆற்றல் மற்றும் சுகாதாரத்துறை ஆகிய விஷயங்களில் மேம்பட முழு ஒத்துழைப்பை அளிக்கக்கூடும்.
வணக்கம் பிரான்ஸ்இந்தியாவை பொறுத்தவரை பசுமை மின்சக்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாதுகாப்பு விஷயத்தில் ரஷ்யாவை நம்பியிருக்கும் நிலையை கைவிட வேண்டும் என விரும்புகிறது. இவை இரண்டிற்கும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் வெல்கம் கேட்ரஷ்யா – உக்ரைன் போர் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பலரும் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பினாலும் எதிர்ப்பு மனநிலையை இன்னும் முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.