Rajini: ரஜினிக்கு வந்த திடீர் ஆசை..ஜெயிலர் கதையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..!ஒர்கவுட் ஆகுமா ?

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிக்ரு வெற்றிகளை பெறவில்லை.

குறிப்பாக அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தை மிகவும் நம்பியுள்ளார்.

Thalapathy 67: விஜய்க்கு அந்த படங்கள் பிடிக்காது..கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்..SAC ஓபன் டாக்..!

இதைத்தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரஜினி. அதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா இயக்குகிறார். மற்றொரு படத்தை இயக்கும் இயக்குனரின் தேர்வு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஜெயிலர் படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபகாலமாக ஜெயிலர் படத்தில் தென்னிந்திய திரையுலகை சார்ந்த சூப்பர்ஸ்டார் நடிகர்கள் கமிட்டாகி வருகின்றனர்.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கெல்லாம் மிகமுக்கிய காரணம் ரஜினி தான் என சொல்லப்படுகின்றது.
கமல்
நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மல்டி ஸ்டாரர் படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இதைப்போல தானும் ஒரு மல்டி ஸ்டாரர் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்த ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார் போன்றவர்களை இணைத்துள்ளார். இதன் காரணமாக கதையில் பல மாற்றங்களை ரஜினி செய்யச்சொன்னதாக தகவல்கள் வருகின்றன. எது எப்படியோ படம் ஹிட் ஆனால் போதும் என்பது ரஜனி ரசிகர்களின் ஆசையாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.