நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலிஜீயம் அளிக்கும் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிப்பதும் தாமதப்படுத்துவதும் குறித்த தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே கடினமான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு பதிலளிக்க அரசுத்தலைமை வழக்கறிஞர் 10 நாட்கள் அவகாசம் கோரினார்.விரைவில் 5 நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.