பாட்னா செல்லவிருந்த பயணி தவறுதலாக உதய்பூரில் தரையிறக்கம்… எப்படி என விசாரணை

டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் பாட்னா செல்ல வேண்டிய பயணி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற விமானத்தில் ஏறியது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தவறுதலாக உதய்பூர் வந்திறங்கியதாக அந்தப் பயணி தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், அவரை அதே நாளில் டெல்லி சென்ற மற்றொரு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

பயணிகளின் போர்டிங் பாஸ் முழுமையாக ஸ்கேன் செய்யப்படவில்லை என்றும், விமானம் புறப்படுவதற்கு முன்பாக அந்தப் பயணியின் போர்டிங் பாஸ் இருமுறை சரிபார்க்கப்பட்ட போதும், அவர் தவறுதலாக விமானத்தில் எப்படி ஏறினார்? என்பதையும் கண்டுபிடித்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.