ஆத்தி.. இவ்வளவா..? ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ஷாக் தகவல்..!

இந்தியாவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாநில அரசுகள் மூலம் உணவு தானியங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு ஏற்ப சலுகைகளையும் உள்ளடக்கியுள்ளதால் 5 வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS இன் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 75 ஆயிரத்து 689 போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி கூறினார். இதில் அதிகபட்சமாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் 921175 ரேஷன் அட்டைகளும், பிகார் மாநிலத்தில் 426865 ரேஷன் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

5 வகையான ரேஷன் கார்டுகள்

PHH முன்னுரிமை குடும்ப ரேஷன் கார்டு:

இந்த அட்டை அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை வைத்து குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு.

AAY அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு:

இந்த அட்டை பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பமும் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு.

APL (வறுமைக் கோட்டிற்கு மேல்) ரேஷன் கார்டு:

இந்த அட்டை வறுமைக் கோட்டிற்கு மேல் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

BPL (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு:

இந்த அட்டை வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

AY அன்னபூர்ணா யோஜனா ரேஷன் கார்டு:

இந்த அட்டை ஏழை மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.