பாஸ்போர்ட் திடீர் மாயம்., விமானத்தை தவறவிட்ட அவுஸ்திரேலிய குடும்பம்


இந்தியாவில், பெங்களூரு விமான நிலையத்தில் திடீரென பாஸ்போர்ட் காணாமல் போனதால் அவுஸ்திரேலிய குடும்பத்தினர் விமானத்தை தவறவிட்டனர்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) புறப்படுவதற்கு முந்தைய பாதுகாப்பு சோதனையில் பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசிகள் காணாமல் போனதால், அவுஸ்திரேலிய குடும்பம் ஒன்று தாயகம் திரும்பும் திட்டத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய குடும்பம்

குடும்பம் டாக்டர் ரமேஷ் நாயக், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டது.

பாஸ்போர்ட் திடீர் மாயம்., விமானத்தை தவறவிட்ட அவுஸ்திரேலிய குடும்பம் | Aussie Family Miss Flight Passports Missing IndiaRepresentative pic: HT Photo

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கர்நாடகாவின் மங்களூரு மற்றும் துமகுருவில் உள்ள தங்கள் குடும்பத்தைப் பார்க்க அவர்கள் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

இலங்கை, கொழும்பு வழியாக மெல்போர்னுக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் ஜனவரி 22 அன்று அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பவிருந்தனர்.

கடவுச்சீட்டு மாயம்

ஆனால், அவர்களது கடவுச்சீட்டு காணாமல் போனதால் ஏற்பட்ட காலதாமதத்தால் அவர்கள் விமானத்தை தவறவிட்டுள்ளனர்.

இதனால், வேறு விமானத்தில் அவுஸ்திரேலிய திரும்ப, ஜனவரி 26 அன்று குடும்பம் ஒரு விமானத்திற்கான புதிய டிக்கெட்டுகளை வாங்க வேண்டியிருந்தது, அதற்கு கூடுதலாக ரூ. 6.6 லட்சம் செலவாகும்.

சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அலட்சியம்

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புச் சோதனையின் போது நாயக் குடும்பத்தினர் தங்களது பாஸ்போர்ட், பணப்பை மற்றும் மொபைல் போன் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்ததாக கூறப்படுகிறது.

சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் காணாமல் போன பாஸ்போர்ட்டுகளை ஒன்றரை மணி நேரம் கழித்து கண்டுபிடித்து, ஸ்கேன் செய்த பிறகு, அவர்கள் “சிக்கிக்கொண்டோம்” என்று கூறினார்கள், ஏனெனில் அந்த நேரத்தில், அவர்களின் விமானம் புறப்பட்டுவிட்டது.

மற்றொரு பயணி நாயக் குடும்பத்தின் உடைமைகளை வைத்திருந்த தட்டுக்கு மேல ஒரு வெற்று தட்டை வைத்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டது என்று சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிஐஎஸ்எஃப் மீது வழக்கு

இந்நிலையில், தங்களுக்கு நிதி இழப்பு மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதால், CISF மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

டாக்டர் நாயக், CISF ஊழியர்கள் தங்கள் நிலைமையைக் கவனிப்பதில், மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். “எந்தவித பொறுப்புணர்வும் அல்லது வருத்தமும் இல்லாமல், சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் எங்களிடம் எங்களின் உடைமைகள் கிடைத்ததால் அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு சாதாரணமாக சொன்னார்கள்,” என்று அவர் தெரிவித்தார். குடும்பம் ஜனவரி 26 அன்று அவுஸ்திரேலியாவுக்கு பறந்தது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.