'அப்பா பார்த்துக்கொள்வார்'… உதயநிதி சீக்ரெட்டை உடைக்கும் ஆபிசர்கள்..! நிச்சயம் ஆபத்து

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எப்போது தொடர்பு கொண்டாலும் ஒரே பதில்தான் வருகிறது என்றும் அப்படி அவர் இதில் பிசியாக இருக்கிறார் என்றும் முக்கிய ஆபிசர்கள் குமுறுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி 10 ஆண்டுகளுக்கு பிறகு
திமுக
ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என அரசியல் அரங்கில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. தனக்கு பின்னர் மகன்தான் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்ததால், உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவியை கொடுத்து அரசியலுக்கு இறக்கினார் ஸ்டாலின்.

அதனை தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதியில் களமிறக்கி எம்எல்ஏவுமாக்கினார். ஆனால், தனது தலைமையில் ஆட்சி அமைத்தபோது மகனுக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு காரணம், எம்எல்ஏவாக உதயநிதியின் செயல்பாடுகள் பேசுபொருளாக வேண்டும்… அதற்கு பின்னர் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்ப வேண்டும்; அது குறித்து பேசி பத்திரிகைகளில் எழுதப்பட வேண்டும் என்ற ஒரு பரபரப்பை உண்டாக்கி அதற்கு பிறகு அமைச்சர் பதவியை கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற நினைப்புதானே தவிர மற்றபடி உதயநிதி யின் பெயருக்கு முன்னாள் அமைச்சர் என்ற பதவி ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றுதான்.

தற்போது தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையை கவனித்து வரும்
உதயநிதி ஸ்டாலின்
துறை ரீதியாக மீடியாக்களில் தோன்றி வந்தாலும் கட்சி பணிகளில் அவர் ஆக்டிவாக இல்லை என்று கூறப்படுகிறது. கட்சி தொண்டர்களை சுத்தமாக அவர் மறந்துவிட்டதாகவும், துறை ரீதியான கோரிக்கைகளுக்கு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதிகாரிகள் சிலரே குமுறுகின்றனர்.

உதயநிதியை எப்போது தொடர்பு கொள்ள முயன்றாலும் ”தலைவர் ஃப்ரீ ஆனதும் கூப்பிடுகிறோம்” என்று அவரது தனிப்பட்ட செயலாளர்கள் ஒரே பதிலை கூறுவதாக சொல்கின்றனர். மேலும், அப்படி எந்த வேலையில் அவர் பிசியாக இருக்கிறார் என்று தெரியவில்லை.. தேர்தலில் தன்னை ஜெயிக்க வைக்கத்தான் அப்பா இருக்காரே என்று அவர் நினைக்கிறாரா என்று கேட்கின்றனர்.

உதயநிதி அமைச்சரான பிறகு தான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று தெரிவித்தது ஏதோ பெரிய தியாகம் செய்ததை போல அவர் நினைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். ஆனால், உதயநிதி தொடர்ந்து பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னமும் கூட அரசியல் களத்தில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்றும் விமர்சனம் உள்ளது.

மேலும், திமுக தொண்டர்கள் மத்தியில் இன்னும் அவர் செல்வாக்கு பெறவில்லை என்றும் அதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து திமுக வட்டாரத்தில் உள்ளவர்களிடம் பேசியபோது, எல்லாத்தையும் அப்பா பாத்துக்கொள்வார் அவர் என்னை வெற்றி பெற வைப்பார் என்று நினைத்துக்கொண்டு தொண்டர்களை கவனிக்காமல் இருந்தால் தேர்தலில் அவருக்கு சிக்கல் ஏற்படும்; இன்னமும் சொகுசு குடும்பத்தின் வாரிசாக இல்லாமல் தன்னை ஒரு அரசியல்வாதியாக நினைத்து களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.