நீராவிக்குளியல் தொட்டிகளில் பெண்களை ரகசியமாக படமெடுத்த 17 பேர் கொண்ட கும்பல் கைது..!

ஜப்பானின் பிரசித்திப் பெற்ற நீராவிக் குளியல் தொட்டிகளில் பெண்கள் கடந்த 30 ஆண்டுகளாக ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர்.

இதனால் சுமார் 10 ஆயிரம் பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மூலகாரணமாகக் கருதப்படும் நபரான கரின் சைட்டோ கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

இதன்மூலம் இக்குற்றத்தில் உடந்தையான மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட நீராவிக் குளியல் தொட்டிகளில் ரகசிய கேமராக்கள் மூலம் பெண்கள் படமாக்கப்பட்டதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.