ஜப்பானின் நீலப் பூக்களின் பள்ளத்தாக்கு…இணையவாசிகளை திகைக்க வைக்கும் வீடியோ காட்சி


ஜப்பானின் நீல நிற பூக்களின் பள்ளத்தாக்கு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி இணையவாசிகளை வியப்படைய செய்துள்ளது.

பூத்து குலுங்கும் நீல வண்ணப் பூக்கள்

ஜப்பானில் பொதுவாக வசந்த காலத்தை பற்றி சிந்திக்கும் போது பெரும்பாலான மக்கள் உள்ளுணர்வாக செர்ரி மலர்களைப் பற்றி நினைக்கிறார்கள்.

அவ்வாறு டோக்கியோவிற்கு அருகில் உள்ள இடம் ஒன்று, அற்புதமான வசந்த கால காட்சிகளை கொண்டுள்ளன.
டோக்கியோவில் உள்ள ஹிட்டாச்சி கடலோரப் பூங்காவில் மிகவும் விரிவான மலர் வயல்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது. 

குளிர்காலத்தில் பனி ரோஜாக்கள் மற்றும் டூலிப்ஸ், பாப்பிஸ் மற்றும் ரோஜாக்கள் உட்பட பருவங்களுக்கு ஏற்ப மாறும் பூக்கள் நிறைந்த தோட்டம் இந்த பூங்காவில் உள்ளது. 

இதில் தற்போது வசந்த காலத்தை நினைவு கூறும் விதமாக பெரும்பாலான மலைப் பரப்புகள் நீல நிற பூக்கள் சூழ்ந்துள்ளன.
இந்த பூ தாவரம் நெமோபிலா அல்லது குழந்தை நீலக் கண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


சமூக வலைத்தளத்தில் வைரல்

 
இந்நிலையில் நீல நிற பூக்களின் அழகிய பள்ளத்தாக்கின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, மேலும் பயனர்கள் இந்த இடத்தின் அழகை கண்டு திகைத்து நிற்கின்றனர்.

ஜப்பானின் நீலப் பூக்களின் பள்ளத்தாக்கு…இணையவாசிகளை திகைக்க வைக்கும் வீடியோ காட்சி | Japans Valley Of Blue Flowers Goes Viral Video

வியாழக்கிழமை வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, ட்விட்டரில் 71,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 800 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. 

இதில் பயனர் ஒருவர்  “பூமியில் நீல வானம்” என்று கருத்து தெரிவித்தார், மற்றொரு நபர் “நீல இதழ்களின் அலைகள்”  என்று வர்ணித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.