திமுக பேனர் கலாச்சாரம்: ‘டிராமா எதுவும் வேண்டாம்’ – அறப்போர் இயக்கம் தெறி.!

கடந்த அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்ட போது, அது சரிந்து விழுந்ததால் இளம்பெண் உட்பட இருவர் இறந்தனர். அதற்கு அப்போதைய எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம்

அமைப்புச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.

இதனை மீறி வைக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னரும் பேனர் கலாச்சாரம் தொடர்ந்து வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.

அதைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி ஆர்எஸ் பாரதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘கட்சி பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்;

பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்றும் கழகத் தலைவர் ஒப்புதலோடு அறிவிக்கிறேன்.

இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைக் கழக மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தளங்களின் கடவுச்சொல்லை சேமிக்க சிறந்த ஐந்து செயலிகள்

இந்தநிலையில் திமுக அமைப்பு செயலாளார் அறிவுறுத்தல்களையும் மீறி பேனர் கலாச்சாரம் தொடர்ந்து வருவதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. தாம்பரம் – முடிச்சூர் – மணிமங்கலம் சாலையில் பேனர் வைக்கப்பட்டதை மேற்கொள் காட்டி அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஒரு கட்சியின் தலைவர் உத்தரவை அவரது கட்சி தொண்டர்கள் மதிக்கிறார்களா மிதிக்கிறார்களா என்பது பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.

ஆனால் ஒரு மாநில முதலமைச்சர் பேனர் வைக்காதீர்கள் என்று கெஞ்சுவதும் அதை ஆளுங்கட்சியினர் துளியும் மதிக்காமல் மீறுவதும், காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மிகவும் அருவருப்பை ஏற்படுத்துகிறது. தொலைக்காட்சி சீரியலில் நடிப்பதை விட இவர்கள் மிக பிரமாதமாக நடிப்பதாகவே நினைக்க தோன்றுகிறது. இந்த டிராமா போடுவதை நிறுத்திவிட்டு இந்த பேனர் வைத்த சமூக விரோதிகள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த ஆபத்தான அருவருப்பான விளம்பரகளுக்கு முடிவு கட்ட முடியும்’’ என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.