Samantha: 'நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்'.. ஓபனா பேசிய சமந்தா?

நடிகை சமந்தா தனது திருமண வாழ்க்கை குறித்து கூறியதாக வெளியாகி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா விவாகரத்துநடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். சுமார் 10 ஆண்டுகள் டேட்டிங்கிற்கு பிறகு இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டுகள் இருவரும் சந்தோஷமாய் வாழ்ந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
​ Dhanush, Meena: தனுஷ் மீனா குறித்து பச்சையாய் பேசிய பயில்வான் ரங்கநாதன்… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!​
நடிகையுடன் நெருக்கம்அதன்பிறகு இருவருமே தங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகர் நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது. மேலும் நாக சைதன்யா தான் கட்டியுள்ள பிரமாண்ட வீட்டிற்கு ஷோபிதா துலிபாலாவை அழைத்து சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்களின் காதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
​ Andrea: தீயாய் வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா… அந்த கேள்வியை கேட்கும் நெட்டிசன்ஸ்!​
கருக்கலைப்புஇந்நிலையில் நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து குறித்து சென்சார் போர்டு உறுப்பினரும் சினிமா தகவல்களை ஷேர் செய்து வருபவருமான உமர் சந்த் தொடர்ந்து தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். சமந்தா, நாக சைதன்யா குறித்து கூறியதாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் நாக சைதன்யா மிகவும் மோசமான ஒரு கணவர் என்றும் அவர் கொடுத்த டார்ச்சரால் தான் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்ததாக பதிவிட்டிருந்தார்.
​ அதை நினைத்து நினைத்து வருத்தப்படும் சமந்தா!​
நான் செய்த தவறுஇந்த டிவிட்டே உண்மையா என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது ஒரு புதிய டிவிட்டை பதிவிட்டுள்ளார். அதில் நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் பழமைவாதிகள் என சமந்தா கூறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களுடன் ஒரு கூண்டில் வாழ்வது போல் உணர்ந்ததாகவும், தைரியமான கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டாம். இதுபோன்ற ஆடைகளை அணியாதே, இரவு பார்ட்டிகளுக்கு செல்லாதே , ஐட்டம் நம்பர்களுக்கு நடனம் ஆடாதே என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், நாக சைதன்யாவை திருமணம் செய்ததுதான் தான் செய்த மிகப்பெரிய தவறும் என்றும் நடிகை சமந்தா கூறியதாக தெரிவித்துள்ளார். ​ Aishwarya Rajinikanth: தீவிரமாகும் பிரச்சனை.. மகன்களுக்கு ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
சும்மா விடாதீங்கஉமர் சந்தின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். உங்களுக்கு வேற வேலையே இல்லையா இப்படி எதையாவது கிளப்பி விடுவதுதான் ஃபுல் டைம் பிஸ்னஸா என கேட்டு வருகின்றனர். மேலும் சமந்தா இவரது டிவிட்டுகளை பார்த்துவிட்டு இந்த நபர் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்றும் அவரை சும்மா விடாதீர்கள் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
​ Meena, Dhanush: தனுஷ் கூட மீனாவுக்கு கல்யாணமா? இது அவங்களுக்கு தெரியுமா என விளாசும் ரசிகர்கள்!​
கார் வாங்கி கொடுத்த விஜய்ஏற்கனவே நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு காஸ்ட்லியான கார் வாங்கி கொடுத்தாகவும், அது அவருடைய மனைவிக்கே தெரியும் என்றும் கூறியிருந்தார். பின்னர் தனுஷ், மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருந்தார் என்றும் இதனால் தான் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டார் என்றும் கூறியிருந்தார். மேலும் நடிகர் சூர்யா, சூர்யா 42 படப்பிடிப்பு தளத்தில் நடிகை திஷா பதானியை அடிக்கடி கேரவனுக்குள் அழைத்து செல்வதாகவும் கூறியிருந்தார். இதற்கே நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். தற்போது சமந்தா ரசிகர்களின் வாயிலும் அகப்பட்டு வாங்கிக்கட்டி வருகிறார்.
​ Suriya 42: நடிகையை அடிக்கடி கேரவனுக்குள் அழைத்து செல்லும் சூர்யா? பகீர் கிளப்பும் பிரபலம்!​
Samantha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.