குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை பாதையில் முகாமிட்ட காட்டு யானைகளை போராடி விரட்டிய வனத்துறையினர்

குன்னூர்: கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் அடிக்கடி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு  படையெடுத்து  வருகின்றன. இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்  சாலையை கடக்க 3 காட்டு யானைகள் நேற்று வந்தன.  அப்போது, வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி  யானைகள் செல்வதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

பின்னர்,  அங்கிருந்து ரயில் பாதை வழியாக குடியிருப்புக்குள் நுழைய முயன்ற 3 யானைகளை வனத்துறையினர்  போராடி அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். மீண்டும் காட்டு யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.