அப்பா அக்கா கொடூர கொலை… நடிகையின் மகன் வெறிச்செயல்… சென்னையில் பயங்கரம்!

சென்னை மாங்காடு அடிசன் நடிகர் பகுதியில் வசித்து வருபவர்கள் செல்வராஜ் – சாந்தி தம்பதி. சாந்தி சினிமாத்துறையில் துணை நடிகையாக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னையை அடுத்த படைப்பையில் வசித்து வருகிறார்.

அவர்களின் ஒரே மகளான பிரியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் – சாந்தி தம்பதியின் இளைய மகனான பிரகாஷ் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Andrea: ஆஹா… மஞ்சள் நிற பட்டு சேலையில் மாம்பழம் போல இருக்கும் ஆண்ட்ரியா…

இந்நிலையில் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் பிரகாஷை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டில் இருந்த பிரகாஷ், அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது அப்பா செல்வராஜை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கைத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். நடிகை சாந்தி பிரகாஷுக்கு மருந்து வாங்க கடைக்கு சென்றதால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட தந்தை செல்வராஜ், மகள் பிரியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வந்த கோபம்.. லால் சலாம் படப்பிடிப்பில் நடந்தது என்ன?

மேலும் அப்பாவையும் அக்காவையும் கொடூரமாக கொலை செய்த பிரகாஷையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பிரகாஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷும் தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியுற்றியுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் பெற்ற மகனே அப்பாவையும் அக்காவையும் கஞ்சா போதை வெறியில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனின் போதை வெறிக்கு கணவரையும் மகளையும் பறிகொடுத்துள்ளார் நடிகை சாந்தி. செல்வராஜின் உடலையும் பிரியாவின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போது அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் கதறி அழுதது கலங்க செய்தது.

Rohini: ரகுவரன் இப்போது இருந்திருந்தால்… மறைந்த கணவரை நினைத்து உருகிய ரோகினி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.