இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல்  படை கைது செய்தது. 6 இலங்கை மீனவர்களையும் தூத்துக்குடி தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் கடலோர காவல் படை ஒப்படைத்தது.

இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதேஷ் என்ற ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் மீன்பிடி படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலோர காவல் குழு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.