Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வந்த கோபம்.. லால் சலாம் படப்பிடிப்பில் நடந்தது என்ன?

லால் சலாம் படம் பிடிப்பு தளத்தில் பொதுமக்களின் செல்போன்கள் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 2006ஆம் ஆண்டு தனுஷை திருமணம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், குழந்தைகள் பிறந்த பிறகு திரைப்படங்களை இயக்கும் பணியில் இறங்கினார். 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்த படத்தில் தனுஷும் கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
​ Vijay, Vijay Secret affair: விஜய்யின் ரகசிய உறவு.. சண்டை போட்டு எச்சரித்த சங்கீதா.. கொளுத்தி போட்ட பிரபலம்… விளாசும் ரசிர்கள்!​
வீடியோ ஆல்பம்தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். சினிமாவில் சில நாட்கள் இடைவெளி விட்டிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஆண்டு இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
​ திட்டம்போட்டு நினைத்ததை சாதித்த ஜோதிகா!​
லால் சலாம்தற்போது கணவர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படம் இந்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
​ Suriya: மும்பையில் பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து… சொகுசு பிளாட் வாங்கிய சூர்யா.. விலையை கேட்டா..​
படப்பிடிப்புஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. இதற்காக படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.
​ Ajith: ஷாலினிக்கு துரோகம் செய்கிறாரா அஜித்? இதை விஜய் ரசிகர்கள் கூட நம்ப மாட்டாங்க!​
திரண்ட மக்கள்படக்குழுவினரின் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலக பெயர் பலகை சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற மாற்றி வைக்கப்பட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால் தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் படப்பிடிப்பை காண பொது மக்கள் திரண்டனர்.
​ Samantha: ‘நான் செஞ்ச பெரிய தப்பே அதுதான்’.. ஓபனா பேசிய சமந்தா?​
செல்போனை பிடுங்கிஅப்போது அவர்கள் படப்பிடிப்பு காட்சிகளை தங்கனின் செல்போன்களில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தனர். இதையறிந்த படக்குழுவைச் சேர்ந்த பாதுகாவலர்கள், பொதுமக்களிடம் இருந்து செல்போன்களை பிடுங்கி அதில் பதிவாகி இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கினர். இதனால் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரொம்பவே கோபப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அவரை இன்னும் கடுப்பாக்கி விட்டதாம்.
​ Meena: ‘பப்புக்குலாம் கூப்பிடுவாங்க.. தனியா இருந்ததே இல்லை’ போட்டுடைத்த மீனா!​
Aishwarya Rajinikanth

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.