தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.  வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணி அலுவலர் சுசீலா முன்னிலை வகித்தார். இதில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த பாதுகாப்பு கூட்டத்தில் பெண் குழந்தை சிசு, கருக்கலைப்பு தடுப்பு, குழந்தைகள் பள்ளியில் விடுபடாமல் சேர்த்தல், ஆதார் பதிவு, தடுப்பூசி முறையாக செலுத்துதல், போதைப்பொருள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எழில், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.