பாஜக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்..!!

பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் 100 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் நிர்வாகிகள் இணைவது தொடர்வதால் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் தொடர்கிறது. பாஜகவில் இருந்து விலகி மேலும் பல நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருவார்கள். கட்சி நிர்வாகிகளின் குறைகளை அண்ணாமலை கேட்டறிவதில்லை என்று அதிமுகவில் இணைந்த பெண் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கட்சி நிர்வாகிகளின் கருத்தை அண்ணாமலை கேட்க மறுப்பதே நிர்வாகிகள் விலகலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும்,அதிமுகவில் இணைவோரை துரோகி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பதா என்று பெண் நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.