புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் புதிதாக 699 பேருக்கு கொரேனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகி விட்டனர். இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 699 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,599ஆக அதிகரித்துள்ளது.  கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தனர்.   தினசரி பாதிப்பு விகிதம் 0.71 சதவீதம், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.91 சதவீதம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.