மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வணங்கான்?

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட படம் வணங்கான். இந்த படத்தை சூர்யா தயாரித்து, அவரே நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது. சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்று அவரும் நடித்து வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக பாலா அறிவித்தார். தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் பாலா.

இத்திரைப்படத்திற்காக கேரளாவில் இருந்து சில துணை நடிகைகளை அழைத்து வந்துள்ளார் ஜிதின் என்கிற ஒருங்கிணைப்பாளர். துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் “வணங்கான் படத்தில் 3 நாட்கள் நடிக்க மொத்தமாக 22 ஆயிரத்து 600 ரூபாய் பேசினார்கள். ஆனால் சொன்னபடி அந்த தொகையை கொடுக்கவில்லை. அதை எதிர்த்து கேட்டதற்கு அடித்து உதைக்கிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.