லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் அக நக என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன்- 2 படத்தின் பின்னணி இசைப் பணிகள் லண்டனில் உள்ள அபெய் ரோடு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது . இது குறித்த தகவலை ஏ.ஆர். ரகுமான் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதோடு அங்கு மணிரத்னத்துடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். முதல்பாகத்தை விட இரண்டாம் பாக இசைப் பணிகள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக லண்டனில் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை உலகதரத்தில் வழங்கி வருகிறார் ரஹ்மான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.