எடியூரப்பா ஹெலிகாப்டர் குறுக்கீடு செய்த நாய்கள்| Yeddyurappa chopper intercepted dogs

துமகூரு, : முன்னாள் முதல்வர் எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க, நாய்கள் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு உண்டானது.

துமகூருவின் துருவகெரேயில் நேற்று, பா.ஜ.,வின் வெற்றி சங்கல்ப யாத்திரை நடந்தது.

இதில் கலந்து கொள்ள, பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் எடியூரப்பா வந்தார். துருவகெரேயில் உள்ள பள்ளி மைதானத்தில், ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றது.

அப்போது அங்கு வந்த, இரண்டு நாய்கள் ஹெலிகாப்டரை பார்த்து குரைத்து கொண்டே இருந்தன.

இதனால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்படவில்லை. அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த, போலீஸ்காரர்கள் நாய்களை விரட்டினர். இதன்பின், ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன், எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர், கலபுரகியில் தரையிறங்க முயன்ற போது, ஏற்பட்ட சுழற்காற்றில் ‘பிளாஸ்டிக்’ பைகள் பறந்து, தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.