ஓபிஎஸ்-க்கு வெள்ளிகிழமை வரை கெடு; அதிமுக வழக்கில் உயர்நீதிமன்றம் பரபர..!

அதிமுகவில் இரு தலைமைகளாக இருந்த

, இபிஎஸ் இடையே பிரிவு ஏற்பட்டு, தற்போது உட்கட்சி மோதல்கள் வெடித்து வருகிறது. அதிமுகவின் பெரும்பாலான பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பின் நிற்பதால், பன்னீர்செல்வத்தின் நிலை கேள்விகுறியாகி உள்ளது.

இந்தநிலையில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நிறைவடைந்தது. அதில்

மட்டுமே மனு தாக்கல் செய்தார். எனவே இவர் போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த ஞாயிறு அன்று ஓபிஎஸ் தரப்பின் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என தடை விதித்தது.

அதேபோல் மார்ச் 22ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் விளக்கம் கேட்காமல் காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையமானது. நியாமற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதியமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பெரும்பான்மை இருப்பதால் எந்த முடிவையும் எடுப்போம் என்ற தொனியில் எடப்பாடி தரப்பு செயல்பட்டுள்ளது.

தளங்களின் கடவுச்சொல்லை சேமிக்க சிறந்த ஐந்து செயலிகள்

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிரானவை. யாரும் போட்டியிட முடியாத வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு நிபந்தனை கொண்டு வரப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அத்துமீறி நடந்திருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. ஆனால் பொதுக்குழு முடிவுகளே இறுதியானது; இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் தேதியை குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வருகிற 24ம் தேதி வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.