காஞ்சிபுரத்தில் பயங்கரம்: வாலிபர் கொடூரமாக வெட்டிக்கொலை.! தந்தை-மகனுக்கு வலைவீச்சு.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சதாவரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (23). இவரும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான குணா என்பவரும் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு வந்து குணாவின் தந்தை, தமிழ்வாணனை கண்டித்துள்ளார்.

இதனால் இவர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குணா மற்றும் அவரது தந்தை, தமிழ்வாணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த தமிழ்வாணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தமிழ்வாணன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழ்வாணனை வெட்டிக்கொன்ற குணா மற்றும் அவரது தந்தை ரகு ஆகிய இரண்டு பேரையும் வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.