காஞ்சிபுரம் வெடி விபத்து; முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

காஞ்சிபுரம் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளனர்.

பட்டாசுக்கு பெயர் போன சிவகாசிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பட்டாசு ஆலை வெடி விபத்து நடக்கும் மாவட்டங்களில் காஞ்சிபுரம் முதன்மையாக உள்ளது. கடந்த 2006ல் வையாவூரில் கடந்த நடந்த வெடி விபத்தில் 3 பேர் பலியானர், அதேபோல் அதே ஊரில் 2014ல் நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். அதேபோல் 2017ல் ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளத்தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். 2018ல் காஞ்சிபுரம் நாகலுத்து தெருவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை குடோனில் பெரும் வெடி விபத்து இன்று ஏற்பட்டது. குடோனிற்கு வெளியே பட்டாசு மூலப் பொருட்கள் காய வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் உடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளத்தோட்டம் நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விபத்தில் காயமடைந்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், காஞ்சிபுரம் எஸ்.பி டாக்டர் எம்.சுதாகர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்தனர். விரைவில் குணமடைய அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஆர்த்தி, வெடி விபத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிவிபத்து நடந்த குடோனிற்கு 2024ஆம் ஆண்டு வரை அனுமதி வாங்கியுள்ளனர். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. குடோனில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என போலீசார் விசாரணையில் தான் தெரியவரும் எனக் கூறினார்.

உதடு கருப்பாக இதுதான் காரணமாம், இனிமே செய்யாதீங்க!

இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நிவாரணம் அறிவித்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயமுற்றோருக்கு உயர்சிகிச்சைக்கு ரூ.1லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர்

உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘‘காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.