சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சர்வதேச முதலீடுகளும், ஒத்துழைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன என எகிப்து தூதுவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஷ்லே அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும், ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, கடற்றொழிலாளர்களுக்கும், கடலுணவு உற்பத்தியாளர்களுக்கும் உதவுவதற்கு தாம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த எகிப்து தூதுவர், தமது நாட்டின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்ததுடன், விரைவில் வட மாகாணத்திற்கு தான் வருகை தர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எகிப்து தூதுவரின் வடக்கிற்கான விஜயத்தினை ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை சார்ந்து மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை எடுத்துரைத்ததுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதியுதவி கிடைக்குமானால் இத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.