சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு – முழு விவரம்

சென்னை: சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.

இந்தியா முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகிறது. இதன் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ரயில் சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கான பயண நேரம் 6 முதல் 6.30 மணி நேரமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீட்ட வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.